* முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு
பாசி பயறு கால் கிலோ,ஆவாரம் பூ காய வைத்தது
100 கிராம், கால் கிலோ மூன்றையும் அரைத்து
சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகம் அழகு பெறும்.
* தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன்
சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து
கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்
* முகப்பரு தழும்பு மாற எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்,
புதினா சாறு 2 ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு
இவற்றை கலந்து போட்டால் முகப்பரு தழும்பு மாறும்.
* கடலை மாவுடன் உருளைகிழங்கு சாறு சேர்த்து
முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவு பெறும்.
* 3 கேரட் துண்டு, 3 ஆப்பிள் துண்டு இவற்றை ஜூஸ் செய்து,
இந்த ஜூஸ்சில் அரை மூடி எலுமிச்சைசாறு
கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால்
கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.