இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாரா முதல் முறையாக தன்னுடைய மகன்கள் பெயர் என்ன என்பது குறித்து அறிவித்துள்ளார்.
கடந்த இருபது வருடங்களாக தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாகவும், தமிழ் சினிமாவில் “லேடிஸ் சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தையும், தனதாக்கி கொண்டுள்ளவர் நடிகை நயன்தாரா. நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், தொழிலதிபர், என பன்முகத் திறமையோடு விளங்குகிறார்.
நயன்தாரா, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, கதையின் நாயகியாக நடிக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதில் கவனம் செலுத்துகிறார்.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் “நானும் ரவுடிதான்”‘ படம் உருவான சமயத்தில் இருந்தே காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் தங்களது காதலை மறைத்து வைத்த இவர்கள் அதன்பின்னர் சோஷியல் மீடியாவில் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து காதலை உறுதி செய்தனர்.
கடந்த வருடம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் வெளியானது. இந்தப்படத்தின் ரிலீசை தொடர்ந்து கடந்தாண்டு ஜுன் மாதம் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் அட்லி உள்ளிட்ட ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.
திருமணம் ஆன நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா. மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகிய நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது, மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.
இது குறித்து விசாரணை நடத்த அரசு தரப்பில், உத்தரவிடப்பட்ட நிலையில்., நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து தங்களுக்கு 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், மருத்துவரின் அனுமதியோடு உரிய முறைப்படி தான் குழந்தை பெற்றுள்ளதாகவும் கூறி, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இயக்குனர் அட்லி, ஷாருக்கானை வைத்து இயக்கி வரும், “ஜவான்” படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் கலந்து கொண்ட போது, குழந்தைகளுடன் நயன்தாரா ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலானது.
இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். அதன்படி ஒரு மகனுக்கு “உயிர் ருத்ரேனில் என் சிவன்”என்றும் மற்றொரு மகனுக்கு “உலக தெய்வேக் என் சிவன்” என்றும் பெயர் சூட்டியுள்ளனர். மகன்களுக்கு இவர்கள் வைத்துள்ள, வித்தியாசமான பெயர்களை கேட்டு, ரசிகர்கள் ஆச்சர்யத்தோடு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.