உங்களுக்குப் பேய் மீது நம்பிக்கை இருக்கிறதா? பேய்கள் என்றால் பயமா? இந்த செய்தி ராஜஸ்தானில் உள்ள பேய் கோட்டை என அழைக்கப்படும் பங்கர் கோட்டையைப் பற்றியதுதான்.
இன்றும் அந்த கோட்டையில் பேய்கள் வாழ்வதாகவும் அதனால் அந்த கோட்டைக்கு சூர்ய அஸ்தமனத்திற்கு பின்பும், சூரிய உதயத்திற்கு முன்பும் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
இப்படிப் பல திகில் வரலாற்றைக் கொண்ட இந்த கோட்டையைப் பற்றிய சுவாரசியமான திகில் நிறைந்த பதிவுதான் இது.
ராஜஸ்தாஸ்தான் மாநிலம் ஆள்வர் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலை தொடர் பகுதியில் உள்ள சரிஸ்கா என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தான் இந்த பங்கர் என்ற கோட்டை உள்ளது. இந்த கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கேட்டையை பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னர் மாதோசிங் என்பவர் கட்டியுள்ளார்.
இந்த கோட்டைக்கு தற்போது தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்கின்றனர். ஆனால் அரசின் தொல்பொருள் துறையாலேயே சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் இந்த கோட்டையில் மாலை ஆறு மணிக்கு மேல் இருக்க அனுமதி கிடையாது.
அதேப் போல காலை சூரிய உதயத்திற்கு முன்பும் இந்த கோட்டைக்கு யாரும் வருவதற்கும் அனுமதி இல்லை. சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையில் பங்கருக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மிகவும் பேய் பிடித்த கோட்டையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே சட்ட ரீதியாக பேய் உள்ள இடமாகும். இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு ஒரு அடையாள அட்டை மூலம் இந்த வழிமுறைகளை சிறப்பாக குறிப்பிடுகிறது, இது இந்த நகரத்தின் மர்மத்தை மேலும் வலுவாக்குகிறது.
இந்த கோட்டையில் அமானுஷ்யமான பல சத்தங்கள் வருவதாகவும் இந்த கோட்டையில் இரவில் பேய்கள் உலா வருவதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் நம்பி வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த கோட்டையில் பேய்களின் சத்தம், ஒருபெண் அழும் சத்தம், வளையல் சத்தம், பேயின் நிழல்கள், பயமுறுத்தும் விதமான ஒளிகள், திடீர் பாட்டு மற்றும் நடனமாடும் சத்தம் எல்லாம் கேட்பதாகப் பலர் தெரிவித்துள்ளனர்.
ஏன் இந்த கோட்டை இப்படி ஆனது என்பதற்காக சில கதைகள் உள்ளன. இந்த கோட்டையைக் கட்டிய மாதோ சிங் என்ற மன்னர் இந்த கோட்டையை கட்ட முடிவு செய்த போது அவர் தேர்வு செய்த இடம் தனது குரு பாலநாத் என்பவர் தியானம் செய்யும் இடமாக இருந்ததாம். இந்த கோட்டை கட்ட துவங்கியபோது அவர் தனது குருவிடம் அனுமதி கேட்டாராம்.
அதற்கு குரு பாலநாத் தான் தியானம் செய்யும் இடத்தில் நிழல் விழாத அளவிற்குக் கோட்டை கட்ட வேண்டும் என சொன்னாராம். இதை ஏற்றுக்கொண்ட மன்னர் கோட்டையை கட்டினார். சில மாதங்களில் சூரியனின் கோணம் மாறும்போது குரு பாலநாத் தியானம் செய்யும் இடத்தில் நிழல் விழுந்ததாம்.
இதனால் கோபடைந்த குரு பாலநாத் தான் தியானம் செய்யும் இடத்தை நிழல் மறைத்ததால் அந்த கிராமத்தில் இனி எந்த வீடு கட்டினாலும் நிழலுக்கு மேற்கூரை இருக்காது எனச் சாபமிட்டாராம். அதன் படி தற்போது அந்த கோட்டையைச் சுற்றி எதைக் கட்டினாலும் மேற்கூரை கட்ட முடியவில்லையாம். அதே நேரத்தில் மேற்கூரை கட்டினாலும் இடிந்து விழுவதாகவும் பலர் கூறுகின்றனர்.
இதே போல இன்னொரு கதையும் உள்ளது. இந்த கோட்டையில் வாழ்ந்த இளவரசி ரத்னாவதி என்பவர் பேரழகியாக இருந்தாராம். அவரை திருமணம் செய்யப் பல ஆண்கள் ஏங்கினார்களாம். அவளுடைய அழகு மற்றும் மகிழ்ச்சியான குணம் பற்றிய கதைகள் வெகு தூரம் பரவியது. அவளுக்கு பல திருமண வரன்கள் வந்தன.
அந்த சமயம் சூனியம் செய்வதை நன்கு அறிந்த ஒரு தந்திரி பூசாரி அவளை காதலித்தார். ஆனால் அழகான இளவரசிக்கு தன் மேல் விருப்பம் இல்லை என்பதை அறிந்த அவர், இளவரசி மீது மந்திரம் போட முயன்றார்.
கிராமத்தில் இளவரசியின் பணிப்பெண்கள் இளவரசிக்கு வாசனை திரவியம் வாங்குவதைப் பார்த்து, ரத்னாவதி தன்னைக் காதலிக்க வேண்டும் என்று மந்திரம் போட்டான். இதையறிந்த ரத்னாவதி பாட்டிலை வீசினார். அது பாறாங்கல்லாக மாறி தாந்திரீகரை தாக்கியது. அவர் அதன் எடையால் நசுக்கப்பட்டார். ஆனால் அவர் இறப்பதற்கு முன், இளவரசி, அவரது குடும்பம் மற்றும் முழு கிராமத்தையும் சபித்தார்.
அடுத்த ஆண்டு, பங்கர் மற்றும் அஜப்கர் படைகளுக்கு இடையே ஒரு போர் நடந்தது, இது இளவரசி ரத்னாவதி மற்றும் பெரும்பாலான இராணுவத்தின் மரணத்திற்கு வழிவகுத்தது. இந்த சாபத்தால் தான் கிராமத்தில் இந்த கோட்டை ஒரு மர்ம கோட்டையாக மாறியதாக சொல்லப்படுகிறது.
ஒரு நீண்ட சாலையில் இருபுறமும் வரிசையாக இடிபாடுகள் காணப்படுகின்றன. இவை ஜவ்ரி பஜார், நடனம் ஆடும் பெண்களின் வீடுகள்(நச்னி கி ஹவேலி) என்று அழைக்கப்படுகிறது. அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த மரக் கதவைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு மூன்று மாடி கொண்ட பெரிய கோட்டை சிதிலமடைந்திருந்தாலும், எழிலாக உள்ளது. பக்கத்தில் இருந்த சோமேஸ்வரர் கோயில், அழகிய படிக்கட்டுக் கிணற்றுடன், அமைதியாக இருக்கிறது. கோட்டையின் உச்சியில் உடைந்த நெடுவரிசைகள், படிக்கட்டுகள், கற்கள், தூண்கள், ரத்னாவதியின் குளியலறை ஆகியவை உள்ளன.
பங்கரில் பேய்கள் இருப்பதாக புராணக்கதைகள் கூறுகின்றன, அதனால்தான் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றும் சூரிய உதயத்திற்கு முன்பாக கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. ரத்னாவதி இளவரசி வேறு எங்காவது பிறந்திருக்கிறாள் என்றும், சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவள் திரும்பி வருவதற்காக பங்கர் கோட்டையும் பேரரசும் காத்திருக்கிறது என்றும் உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.
சிங்கியாவின் ஆன்மா மற்றும் அவனால் சாபமிடப்பட்டவர்களின் ஆன்மா இன்றும் கோட்டையில் அலைவதாக நம்பப்படுகிறது. அதனால்தான் சூரிய உதயத்திற்கு முன்னரும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னரும் யாரும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. கால்நடைகளை கூட சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாரும் இங்கு அனுமதிப்பதில்லை. இது இந்திய அரசாங்கத்தாலேயே பேய் இருக்கும் இடமாக அறிவிக்கப்பட்ட இடமாகும்.