சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப்பொருள்தான் மீல் மேக்கர். இதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதை கொண்டு மீல் மேக்கர் குழம்பு வைப்பதைத்தான் இந்தப்பதிவில் பார்க்கலாம். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையானது. தோசை, இட்லி, சப்பாத்தி போறவற்றுடனும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 15
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10 பல்
தக்காளி – 1
சாம்பார் பொடி – 2 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளி – 1 எலுமிச்சை அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் -2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 4
சோம்பு – கால் டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு அரை – டீ ஸ்பூன்
சோம்பு கால் – டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் -1 சிட்டிகை
எண்ணெய் -6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தையும் பூண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும்.
சோயா உருண்டைகளை, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
நீரை வடித்து விடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் தக்காளியையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி சேர்க்கவும்.
நன்கு கொதித்ததும், சோயா உருண்டைகளை குழம்பில் போட்டு, சோயா உருண்டைகளில் குழம்புஏறும் வரை கொதிக்க விடவும்.
குழம்பு சிறிது கெட்டியானதும் அரைத்ததைக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கி விடவும். சுவையான மீல் மேக்கர் குழம்பு ரெடி.