அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தினார். இறுதி போட்டியில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
பதினெட்டாவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து இருபத்தி இரண்டு வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.
தொடக்கம் முதலே ஆண்டர்சன் 90.46மீ தூரம் ஈட்டி எறிந்தார். அதைத்தாண்டி வேறு எந்த வீரருமே வீசவில்லை. இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 82.39மீ தூரமும், மூன்றாவது முயற்சியில் 86.37மீ தூரமும்வீசினார்.
நான்காவது முறை எறியும்போது 88.13மீ தூரம் வீசி அசத்தினார் நீரஜ் சோப்ரா. நான்காவது த்ரோ வீசியதுமே வெள்ளிப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்தார் நீரஜ் சோப்ரா.
ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வெல்ல, நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் முதல் முறையாக வெள்ளி வென்று சாதனை படைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.