நம் அனைவருக்கும் தீபாவளி என்றாலே நினைவிற்கு வருவது பட்டாசு மற்றும் ஸ்வீட்ஸ் தான் அதே போன்று கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவில் வருவது “பிளம் கேக்” தான். பிளம் கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்கவே இருக்காது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையம் ஒன்றாகும். பிளம் கேக்கானாது கிறிஸ்துமஸ்காகவே விசேஷமாக செய்யப்படும் ஒரு ரெசிபி ஆகும்.
சுவையான பிளம் கேக்கை நம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை – மூன்று
மைதா – நூறு கிராம்
பட்டர் – நூறு கிராம்
சர்க்கரை – நூறு கிராம்
கார்ன் பிளார் – இரண்டு ஸ்பூன்
ஓமம் தூள் – அரை ஸ்பூன்
திராட்சை – முப்பது கிராம்
சுக்குத் தூள் – அரை ஸ்பூன்
பால் – கால் கப்
முந்திரி,பிஸ்தா,வால்நட்- ஐம்பது கிராம்
செர்ரி பழம் – ஐம்பது கிராம்
செய்முறை:
முதலில் கார்ன் பிளாரை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும் .
பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கூழ் போன்று காய்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது பாலினை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.
முந்திரி,பிஸ்தா மற்றும் வால்நட் போன்றவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
மைதா மாவினை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். செர்ரி பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதில் உருகிய பட்டர் சேர்த்து சாஃப்டாக பிசைய வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். பின் முட்டையை மைதா மற்றும் சர்க்கரை கலவையில் ஊற்றி மீண்டும் பிசைய வேண்டும்.
பின் இந்த கலவையை பாலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின் கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.
வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களை தூவி மீதி மீதி கலவையை ஊற்ற வேண்டும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை தூவி விட வேண்டும்.
ப்ரீ ஹீட் செய்து கொண்ட ஓவனில் கேக் டின்னை வைத்து சுமார் நாற்பது நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அவ்ளோதான் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் “பிளம் கேக்” ரெடி.