உலகில் பலவிதமான கடவுள்கள் உள்ள நிலையில் சிலர் விலங்குகளையும் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். அந்தவகையில் பூனையை கடவுளாக பல ஆண்டுகளுக்கு முன் வழிபடும் பழக்கம் மக்களிடையே இருந்துள்ளது.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள பெக்காலாலே கிராம மக்கள், பூனைக்கு கோவில் கட்டி பூஜை செய்து வருகின்றனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெக்காலாலே கிராமத்தில் பூனையை வழிபடும் வழக்கம் 1,000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர்கள் கூறும் போது பெண் கடவுளான தேவி மங்கம்மா பூனையின் உருவில் கிராமத்திற்கு வந்ததாகவும் தன்னுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தி தீய சக்திகளை விரட்டி மக்களை காத்ததாகவும் கிராம மக்கள் நம்புகின்றனர்.
அப்படி அந்த பெண் தேவி வந்த பிறகு அந்த இடத்தில் ஒரு புற்று தோன்றியதாம். அதன்பின் பூனை வடிவில் தேவியை வணங்கும் வழக்கம் இவர்களிடேயே துவங்கியுள்ளதாம்.
அதன் பின் கிராமவாசிகள் யாரும் பூனையை துன்புறுத்தக் கூடாது. மீறினால், அவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். பூனை இறந்து கிடப்பதை பார்த்தால் அதை அடக்கம் செய்யாமல் அங்கிருந்து செல்ல கூடாதாம். மேலும், மங்கம்மா தேவிக்கு திருவிழாவும் நடத்தப்பட்டும் வருகிறதாம்.
இதுபோல பழங்கால எகிப்தியர்களும் பூனைக்கு கோவில் கட்டி கடவுளாக வழிபட்டுள்ளனர். அவர்கள் பூனையை வழிபடுவதற்கு காரணமாக அமைந்தது அதன் திறமை. அது என்னவென்றால் பாம்புகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறமை உடையதாக இருந்துள்ளது.
இந்த திறமை தான் கடவுளாக மாறுவதற்கு அடையாளமாக இருந்துள்ளது. இதனால் பூனையை கொல்வோருக்கு தண்டனையும் கொடுத்துள்ளனர். மேலும் இறந்த சில பூனைகளை மம்மி ஆக்கியுள்ளனர்.