தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் தான் வாழ்ந்த வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் நடிகை சமந்தா.
கணவர் நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு, கிளாமர் படங்களால் இணையத்தில் புயலைக் கிளப்பினார் சமந்தா.
அல்லு அர்ஜூனுடன் “ஊ அண்டாவா” என்ற பாடலில் நடனமாடி இந்திய அளவில் புகழ் பெற்றார்.
இந்நிலையில் முன்னாள் கணவர் நாக சைத்தன்யாவுடன் தான் வாழ்ந்த வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் சமந்தா.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்கியிருந்த ஹைதராபாத் வீட்டை வாங்குவதில் சமந்தா எவ்வளவு பிடிவாதமாக இருந்தார் என்பதை மூத்த நடிகர் முரளி மனோகர் சமீபத்திய நேர்க்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
சமந்தாவும் நாகசைதன்யாவும் திருமணத்திற்குப் பிறகு அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் தங்களுக்கென தனியாக ஒரு வீடு வாங்கியதும், அந்த அப்பார்ட்மெண்டை காலி செய்து விட்டு, புது வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
தற்போது கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்த நிலையில், தனக்கென ஒரு வீடு வேண்டும் என நினைத்த சமந்தா, தாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த அந்த வீடு தான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் அதிக விலை கொடுத்து அந்த ஹைதராபாத் அப்பார்ட்மெண்டை வாங்கியிருக்கிறாராம் நடிகை சமந்தா.